
போய்கொண்டு இருந்தது. எங்கோ யார் வீட்டு கால்நடைகள் களவு போவதை பேசிக்கொண்டிருந்தவர்களின் நிம்மதியை குலைத்தது ஆனந்தன் கொண்டு வந்த செய்தி.
வள்ளிகுட்டியைகாணவில்லை என்று அவன் கத்தினான். அவனை பொறுத்தவரை வள்ளிகுட்டி ஒரு சாதாரண கன்று குட்டி அல்ல. அவனுக்கு மிகவும் நெருங்கிய ஒரு ஜீவராசி அது.
தந்தை இறந்து சிலவருடங்கள் ஆகிவிட்டிருந்தது.
தாயார் சிவகிரி வேலாயுதத்தை வாழ்க்கையில் சேர்த்துகொண்டார். அது ஆனந்தனின் நிம்மதியை தொலைத்து விட்டிருந்தது ..
வேலாயுதத்தின் போக்கு ஆனந்தனுக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. அந்த ஆள் கிட்டவந்து உரசி உரசி பேசும் விதம் அவனுக்குள் சந்தேகத்தை விதைத்தது ..
அக்காவும் அண்ணாவும் புத்தளத்துக்கு பொன்னையா மாமாவோடு போய்விட்டார்கள் . அவர்கள் அங்கு உள்ள பள்ளிகூடத்தில் படிக்கிறார்கள். மாமாவுக்கு அங்கு பெரிய தென்னந்தோட்டம் இருக்கிறது.
ஆனந்தன் மட்டும் அம்மாவோடு ஒட்டி சுட்டானில் தங்கி விட்டான்.
புதிய அப்பாவின் மீது உள்ள வெறுப்பினால் தானும் புத்தளத்துக்கு சென்று விடலாம் என்றுதான் எண்ணி கொண்டிருந்தான்.அடிக்கடி தாயை தொந்தரவு செய்துகொண்டே இருந்தான்.
அவளுக்கும் வேலாயுதம் மீது பூரண நம்பிக்கை வரவில்லை . தான் அவசரப்பட்டு விட்டதாக எண்ணினாள். இனி என்ன செய்வது . மீதி காலத்தை ஒட்டி விடவேண்டியதுதான் வேற வழி?
ஏதோ விதம் விதமாக சிந்தித்து கொண்டிருந்தவளை திடுக்கிட வைத்தது ஆனந்தனின் குரல்