செவ்வாய், 31 மார்ச், 2020

செய்வினை.. செயல்பாட்டு வினை

சுமார் அரை நூறாண்டுகளுக்கு முன்பு மக்கள் மந்திரம் பில்லி சூனியம் போன்ற விடயங்களில் அதீத நம்பிக்கை வைத்திருந்த காலம் அது.
 அதிலும் அந்த சுள்ளிபற்று கிராமமோ சொல்லும் தரமன்று  அன்றாட வாழ்க்கையில் நடக்கும் எந்த நிகழ்வுகளும் கிராமத்து சாமி பூஜை மந்திரம் பார்வை பார்த்தல் கழிப்பு கழித்தல் செய்வினை போன்ற வார்த்தைகளோடு பின்னி பிணைந்தே இருக்கும்.
இந்தனைக்கும் சுள்ளிபற்று கிராமத்தில் கல்வி அறிவுக்கு குறைவில்லை.   பலர் படித்து நல்ல உத்தியோகத்தில் இருந்தனர் . கிராமத்தின் பெரும்பாலான மக்கள் ஏனைய பிற  கிராமங்களையும் போலவே அனேகமாக உறவினர்களாகவே  இருந்தனர் .
அடிப்படையில் மிகவும் அமைதியான கிராமமாகவே இருந்தது.
கொஞ்ச நாட்களாக அந்த கிராமத்தின் அமைதியை சில  அசாதாரணமான சம்பவங்கள்  குலைத்து கொண்டிருந்தன,
அந்த கிராமத்திலேயே மிகவும் நல்லவர் என்று கூறப்படும் சுந்தரலிங்கம் வாத்தியின் வீட்டு விவகாரங்கள் முழு கிராமத்தின் தினசரி பேசு பொருளாகி இருந்தது,
ஏறைக்குறைய மூன்று மாதங்களாக வாத்தியின் வீட்டுக்கு யாரோ செய்வினை செய்து விட்டார்கள் என்று எல்லோரும் பேசிக்கொண்டார்கள்.
நடு இரவில் மிகவும் மோசமான சத்தங்கள் கேட்கும் .. சிலவேளைகளில் வீட்டு கூரை மேல் கற்கள் வந்து விழும் . வீடு முற்றத்தில் அதிகாலை வேளைகளில் அசுத்தமான பொருட்கள் சிதறி காணப்படும் .
வாத்தியும் குடும்பமும் நிலை குலைந்து போயினர்
நாட்டின் பல திக்குகளில் இருந்தும் ஏராளமான பேயோட்டிகள . செய்வினை தகடு எடுப்பவர்கள் என்று கூட்டி கொண்டுவந்து அவர்கள் மூலம் பேய்கள் செய்வினைக்கெல்லாம் முறையான கவுண்டர் அட்டாக் கொடுத்து கொண்டே இருந்தனர். ஆனாலும்  வாத்தி குடும்பத்தை இலக்கு வைத்த எதிரிகள் ஓய்வதாக இல்லை
புதிது புதிதாக செய்வினை அட்டாக்குகளை நெறிப்படுத்தி வாத்தி குடும்பத்தை துவம்சம் பண்ணிய வண்ணமே இருந்தனர்.
ஒரு கட்டத்தில் வாத்தி என்ன செய்வது என்ற மன உளைச்சலில் அவரது தூரத்து உறவினரான  போலீஸ் அதிகாரியான்  தம்பரின் காதில்   இந்த விடயத்தை போட்டார் .
ஏன் இவ்வளவு காலமாக என்னிடம் சொல்லவில்லை என்று  தம்பர்  கேட்டார்.
வாத்தி கொஞ்சம் தயக்கத்தோடு,..
 உங்களுக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை
 உங்களுக்கு சொல்லி ஒன்றும் பிரயோசனம் இல்லை என்று யோசித்தேன் என்றார்