செவ்வாய், 17 நவம்பர், 2015

குரும்பாசியின் மகள் மீனா!

குரும்பாசியின் குடும்பம்  அந்த கிராமத்தின் அடித்தள ஜாதியில் பிறந்து  அடிமட்ட தொழிலையே செய்துகொண்டும் இருந்தது.
அந்த குடும்பத்துக்கு  வந்தது  சோதனை. அவர்கள் மீது ஒரு பெரிய திருட்டு பட்டம் வந்து விழுந்திருக்கிறது.

அந்த ஊரின் கோவில் நகை ஒன்று காணாமல் போய்விட்டது,
முதல் சந்தேகம் என்னவோ குரும்பாசியின் குடும்பத்தின் மீதே விழுந்தது , அது ஏன்?
உண்மையில் கோவிலுக்கும் அவர்களுக்கும் உள்ள தூரம் மிகவும் அதிகம்,
கோவிலுக்குள் செல்லகூடிய உரிமை கிடைத்து விட்டாலும் அவர்கள் அதை அவ்வளவாக உபயோகிப்பதில்லை.
சாமி மீது  வெறுப்போ அல்லது வேறு காரணங்களோ தெரியாது ஆனால் அவர்கள் அந்த கோவிலுக்கு செல்வது மிகவும் குறைவு.
அப்படியாயின் அந்த கோவிலுடன் அதிக தொடர்புள்ளவர்களை அல்லவா சந்தேகப்படவேண்டும்?

செவ்வாய், 15 செப்டம்பர், 2015

சொல்லாமலே புயல் ஒன்று மையம் கொள்கிறது

வத்சலாவின் வாழ்க்கையில் இனி எந்தவிதமான மகிழ்ச்சிக்கும் இடமே இல்லை என்றாகி ரொம்ப நாளாகி விட்டது. அவளின் அப்பா வெறும் டம்மி பீஸ். அம்மா ராசலட்சிமியோ  திமிர் பிடித்த சர்வாதிகாரி. வத்சலாவின் கல்யாண பேச்சு வார்த்தைகள் எல்லாம் ராசலட்சிமி அம்மாவின்  சதுரங்க வேட்டை களமானது தான் மிச்சம், அவன்ரை படிப்பு காணாது இவன்ரை உத்தியோகம் சரியில்லை .இதொன்றும் இல்லையென்றால் அவனது குடும்ப பாரம்பரியம் சரியில்லை என்று ஏதாவது ஒரு காரணத்தை சொல்லியே தட்டி கொட்டி கொண்டே வத்சலாவின் வாழ்க்கையையே குட்டி சுவராக்கி விட்டாள்.
ராசலட்சுமியை எதிர்க்க அந்த வீட்டில் ஆளே இல்லாமல் போய்விட்டது.
வத்சலாவின் இரண்டு அக்காக்களும் அதிஷ்டவசமாக இளமையிலேயே கல்யாணம் செய்து ராசலட்சுமியின் பார்வையில் இருந்து வெகு தூரம் சென்று விட்டனர்.இருந்த ஒரே ஒரு சகோதரன்  குமாரும்  பலவருஷங்களாக அகதியாகி பலநாடுகளுக்கும் மாறி மாறி அலைந்து கொண்டிருந்தான், இவனது அலைச்சலில் சுமார்  பதினைந்து ஆண்டுகள் ஓடி போய்விட்டிருந்தது

சனி, 27 ஜூன், 2015

அந்த இரண்டாயிரம் ரூபாய் !

கொழும்பில் இருந்து அவசரமாக யாழ்ப்பாணம் செல்லவேண்டி இருந்ததால்  வேறு வழியே இல்லாமல் தனியாகவே ஒரு வான் வாடகைக்கு பிடிக்கவேண்டியதாகிவிட்டது .  சுமார் ஆயிரம் ரூபாயில் செல்ல கூடிய பிரயாணத்திற்கு பதினெட்டாயிரம் ரூபாய் செலவழிக்க வேண்டி இருக்கிறதே என்று எனது கால்குலேட்டர் முளை கொஞ்சம்  கன்ஜல் கணக்கு பார்த்து பார்த்து விசனப்பட்டது.
வான் சாரதி வேறு சில பயணிகளையும் சேர்த்து கொஞ்சம் ரேட்டை குறைப்பதாக உறுதி அளித்தான்,
கொழும்பில் இருந்து புறப்பட்ட நாம் தற்போது நீர்கொழும்பை அடைந்து விட்டோம். வான்காரனோ சதா செல்போனில் பேசிக்கொண்டே ஏதோதோ பயணிகள் ஏற்பாடு பற்றி விசாரித்து கொண்டே இருந்தான்,
எனக்கு என்னவோ  இந்த வான் சாரதி வேறு ஒரு பயணியையும் தேடிப்பிடிக்க போவதில்லை என்ற எரிச்சலில் அவனிடம் பேச்சு கொடுத்தேன்.
தம்பி ஒரு ஆளும் கிடைக்கவில்லையோ?
ஒரு வயசு போன அம்மாவும் மகளும் இருக்கினம் ஆனா ... என்று இழுத்தான் .
உடன பிடிக்கவேண்டியதுதானே இவன் என்ன இழுக்கிறான்?
இதையும் கோட்டை விடப்போகிறான், வேற வான்காரர் மடக்கி கொண்டு போய்விடுவினம் ,
தம்பி பிறகென்ன உடன அவயளை போய் ஏத்துவோம் !
அப்ப சரி .. ஆனா அவை கொஞ்சம் வில்லங்கமானஆக்கள் அய்யா!
நாம பேசாம வாயை கொடுக்காம இருந்தா சரிதானே , சும்மா வாற காசையும் ஏன் விடுவான்?
ம்ம்ம்ம் . காசு செலவழிக்கிறது நான்தானே ? இவனுக்கென்ன ஆக்களிண்ட டீடெயில் ஆராய்கிறான்?