செவ்வாய், 22 மார்ச், 2016

சிவநந்தினி.....தகுதியற்ற ஒரு மனிதகூட்டம்

சென்ற மாதம் ஒரு ஊருக்கு பிதிர்கடமை செய்வதற்கு நான் போயிருந்தேன். அது ஒரு இளம் பெண்ணின் ஆத்மா சாந்தி பூஜை,
நான் வெறும் பார்ட் டைம் பூசாரி மட்டும்தான்.
வழக்கமாக இது போன்ற காரியங்கள் நான் செய்வதில்லை.எனக்கு அதிக அனுபவம் கிடையாது. ஏனோ வெகு தொலைவில் இருந்து தேடி வந்தார்கள்.
அவர்கள் ஊரில்தான்  ஏராளமாக பூசாரிகள் இருப்பார்களே?
 அந்த ஊர் பிரமுகர் வைத்தியநாதன் வீட்டுக்கு வருமாறு சிலர் என்னை வந்து அழைத்தார்கள்.
சுமார் ஐம்பது கிலோமீட்டர்களுக்கு அப்பால் இருந்து தேடிக்கொண்டு வரவேண்டும் என்பது ஏன் என்று எனக்கு அன்று விளங்கவில்லை.    அது பற்றி கேட்டதற்கு ஏதேதோ பதில்கள் சொன்னார்கள் ஆனால் அவை தெளிவானதாக இருக்கவில்லை. எனக்கு பணம் வந்தால் சரிதானே ஏன் வீண் கேள்விகள் என்று பேசாமல் இருந்துவிட்டேன்.