இரவு மூன்று மணியை கடந்துகொண்டிருக்கிறது ஆனாலும் அந்த வீட்டில் தூக்கம்
இல்லை. உஷாவும் பரமும் தாங்கள் பொருந்தாத தம்பதிகள் தான் என்பதை பரஸ்பரம்
உணர்ந்துகொள்ளும் கசப்பு மாத்திரையை மாறி மாறி விழுங்கிகொண்டார்கள்.
நாளை ஒரு நடன கச்சேரிக்கு பாட்டு பாட வேண்டியுள்ளது. அட டா இப்படி தூங்காமல் சண்டை பிடித்து கொண்டிருந்தாள் எப்படி நாளை பாட முடியும்?
உஷா அழுது அழுது கலைத்து விட்டாள்.
விஷயம் இதுதான் அந்த நடன நிகழ்ச்சியை தனது வீடியோவில் பதிவு செய்ய போவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் சொன்ன பொது அவர்கள் மிக அழுத்தமாக மறுத்து விட்டார்கள். பிடிவாதக்கார பரமோ இதை ஒரு கௌரவ பிரச்சனையாக எடுத்துக்கொண்டு நாளை பாட என் மனைவி வரமாட்டா என்று கோபமாக சொல்லிவிட்டான் .
ஏற்பாட்டாளர்கள் ஆடிப்போய் விட்டனர். பலநாள் ஒத்திகை பார்த்து பார்த்து உருவாகிய ஒரு நடன அரங்கேற்ற நிகழ்ச்சியது. இனி திடுதிப்பென்று அதில் மாறுதல் பண்ணவே முடியாது. நடனம் ஆடும் சிறுமியும் பெற்றோர்களும் கூட இரவு தூங்காமல் ஒரே டென்ஷனில் இருந்தார்கள்.
நாளை ஒரு நடன கச்சேரிக்கு பாட்டு பாட வேண்டியுள்ளது. அட டா இப்படி தூங்காமல் சண்டை பிடித்து கொண்டிருந்தாள் எப்படி நாளை பாட முடியும்?
உஷா அழுது அழுது கலைத்து விட்டாள்.
விஷயம் இதுதான் அந்த நடன நிகழ்ச்சியை தனது வீடியோவில் பதிவு செய்ய போவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் சொன்ன பொது அவர்கள் மிக அழுத்தமாக மறுத்து விட்டார்கள். பிடிவாதக்கார பரமோ இதை ஒரு கௌரவ பிரச்சனையாக எடுத்துக்கொண்டு நாளை பாட என் மனைவி வரமாட்டா என்று கோபமாக சொல்லிவிட்டான் .
ஏற்பாட்டாளர்கள் ஆடிப்போய் விட்டனர். பலநாள் ஒத்திகை பார்த்து பார்த்து உருவாகிய ஒரு நடன அரங்கேற்ற நிகழ்ச்சியது. இனி திடுதிப்பென்று அதில் மாறுதல் பண்ணவே முடியாது. நடனம் ஆடும் சிறுமியும் பெற்றோர்களும் கூட இரவு தூங்காமல் ஒரே டென்ஷனில் இருந்தார்கள்.